ADDED : ஜூன் 06, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார், : விருதலைப்பட்டி களத்துப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் தீனதயாளன் 22.
இவர் நண்பர்கள் சசி, பிரேம் உள்ளிட்ட சிலருடன் விருதலைப்பட்டியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். ஓட்டலில் சண்டை போடும் சத்தம் கேட்க மூவரும் அங்கு சென்றனர். ஓட்டல் நடத்தும் பழனிச்சாமி விறகு கட்டையால் அடிக்க வந்துள்ளார். சசி அதை பிடுங்கி பழனிச்சாமி தலையில் அடித்தார்.பழனிச்சாமியின் பேரன் சாரதி தீனதயாளனை விறகு கட்டையால் தலையில் அடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஓட்டல் உரிமையாளர்கள் பழனிச்சாமி, சாரதி மீது கூம்பூர் எஸ்.ஐ., விசாரிக்கிறார்.