sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.4.66 கோடி கையாடல் ; 10 நாள் பின் வழக்கு பதிந்த போலீசார்

/

ரூ.4.66 கோடி கையாடல் ; 10 நாள் பின் வழக்கு பதிந்த போலீசார்

ரூ.4.66 கோடி கையாடல் ; 10 நாள் பின் வழக்கு பதிந்த போலீசார்

ரூ.4.66 கோடி கையாடல் ; 10 நாள் பின் வழக்கு பதிந்த போலீசார்


ADDED : ஜூலை 20, 2024 12:55 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளர் சரவணன் மீது ,10 நாட்கள் பின் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் நெட்டுத் தெருவை சேர்ந்தவர் சரவணன்35. திண்டுக்கல் மாநகராட்சி கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளராக வேலை செய்கிறார். மாநகராட்சிக்கு மக்கள் செலுத்திய வரிப்பணத்தை வங்கியில் செலுத்தாமல் 2023 ஜூனிலிருந்து 2024 வரை கையாடல் செய்துள்ளார். இதை கண்டுபிடித்த மாநகராட்சி அலுவலர்கள் அவர் பணியாற்றிய காலங்களில் உள்ள கணக்குப் பிரிவு ஆவணங்களை சரிபார்த்தனர். வரி பணம் ரூ.4.66 கோடி கையாடல் செய்த தகவல் வெளியானது. கமிஷனர் ரவிச்சந்திரன் சரவணன்,இதை கவனிக்காத கண்காணிப்பாளர் சாந்தி,மற்றொரு இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார்.

சரவணன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு மாநகராட்சி நிர்வாகம் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தது. 10 நாட்களாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

10 நாளுக்கு பின் நேற்று சரவணன் மீது வழக்கு பதிவு செய்தனர். ''விசாரணை முழுமையாக நடத்தப்பட்டு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதோ அனைவரும் கைது செய்யப்படுவர் '' என எஸ்.பி.,பிரதீப் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us