sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அங்கித்திவாரிக்கு இடைக்கால ஜாமின் தினமும் ஆஜராகி கையெழுத்து

/

அங்கித்திவாரிக்கு இடைக்கால ஜாமின் தினமும் ஆஜராகி கையெழுத்து

அங்கித்திவாரிக்கு இடைக்கால ஜாமின் தினமும் ஆஜராகி கையெழுத்து

அங்கித்திவாரிக்கு இடைக்கால ஜாமின் தினமும் ஆஜராகி கையெழுத்து


ADDED : மார் 23, 2024 01:59 AM

Google News

ADDED : மார் 23, 2024 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை தொடர்ந்து பாஸ்போர்ட் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவரை தினமும் காலை 10:00 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி 2023 டிச.1ல் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இவருக்கு 8 முறையாக காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஜாமின் கோரி அங்கித்திவாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்க கூடாது என நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கினர்.

இவர் மீதான வழக்கு திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடப்பதால் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் நகல், அங்கித்திவாரியின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கித்திவாரிக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய நீதித்துறை நடுவர் மோகனா நீதிமன்ற வேலை நாட்களில் தினமும் காலை 10:00 மணிக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us