ADDED : ஆக 15, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பகுதியில் பெரிய கலையம்புத்துார், பெருமாள் புதுார் ரோடு பகுதியில் 14 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது.
இதன் அறிகுறிகளான சிறிதளவு காய்ச்சல் ,வயிற்றுப்போக்கு ,கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் உள்ளன. மூன்று வயது குழந்தை முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பாதிப்பு உள்ளது பழநி சுகாதாரத்துறையினர் நெய்க்காரப்பட்டி பகுதியில் முகாமிட்டு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.