ADDED : ஜூலை 18, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
ஆத்துார், ஜூலை 19-
ஆத்துார் அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு, தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் ஆதரவற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது. டாக்டர் அரவிந்த் நாராயணன் தலைமை வகித்தார். காசநோய் பிரிவு மாவட்ட பொறுப்பு துணை இயக்குனர் சந்திரப்பிரியா, டாக்டர் பிரசாத், தன்னார்வ அமைப்பு சவுந்தரராஜ், ராமு, அழகர்சாமி முன்னிலை வகித்தனர்.
காசநோயாளிகளுக்கு சுண்டல், முட்டை, நிலக்கடலை, பருப்பு, பாசிப்பயறு, பச்சைப்பயறு ஆகிய பொருட்கள் கொண்ட பெட்டகம் வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் ஊட்டச்சத்து, தன்சுத்த பராமரிப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வக நுட்பவியலாளர் லோகநாயகி தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-
