/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
/
பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
ADDED : மார் 24, 2024 02:02 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இவ்விழா பழநி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் மார்ச் 18 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி நதியிலிருந்து புனித நீருடன் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.
ஆறாம் நாளான நேற்றுஇரவு 7:01 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷங்களை எழுப்பினர். சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை முடிந்து வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
பங்குனி உத்திர தினமான இன்று (மார்ச் 24) அதிகாலை தீர்த்தம் வழங்குதலுடன் மாலை 4:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது.
தொடர்ந்து தேர்க்கால் பார்த்தல், மார்ச் 25ல் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மார்ச் 26ல் மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மார்ச் 27ல் இரவு திருக்கொடி இறக்குதல், அதன்பின் தங்க குதிரை வாகனத்தில்சுவாமி பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நடக்கிறது.

