ADDED : ஜூலை 26, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி வட்டார விவசாயிகளுக்கு பசுந்தாள் உரச்செடியான சணப்பை செடி விதைகள் 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது ஒரு கிலோ சணப்பை விதைகள் ரூ.99.50 . 50 சதவீத மானியம் போக ரூ.49.75 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த பயிர் விளைந்த 40--45 நாளில் பூ பூக்கும். செடியோடு நிலத்தில் உழவு செய்வதன் மூலம் செயற்கை ரசாயன உரம் பயன்பாட்டை குறைக்கலாம். விபரங்களுக்கு உதவி வேளாண் அலுவலர் , உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.