sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டிகளால் மக்கள் தவிப்பு...

/

பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டிகளால் மக்கள் தவிப்பு...

பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டிகளால் மக்கள் தவிப்பு...

பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டிகளால் மக்கள் தவிப்பு...


ADDED : ஆக 16, 2024 05:13 AM

Google News

ADDED : ஆக 16, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெயர்பலகையால் குழப்பம்

எரியோட்டிலிருந்து நாகையகோட்டைக்கு செல்லும் ரோடு அன்னசமுத்திரம் அருகே இருக்க வேண்டிய பெயர் பலகை செங்கோட்டைப்பட்டிக்கு முன்னதாக உள்ளது. ஒரே இடத்தில் இரு ஊர் பெயர்கள் இருப்பதால் வெளியூர் பயணிகள் குழப்புகின்றனர்.- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமசாமி,எரியோடு.-------.......

சேதமான ரோடால் அச்சம்

நத்தம் மெய்யம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டின் நடுவில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதமான ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரா,நத்தம்.--------.......

பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டி

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப் புள்ளி அருகே சமத்துவபுரத்தில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி கிடப்பில் விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கு.மணிவேல், கொத்தப்புள்ளி.------.......

பள்ளத்தால் அவதி

நிலக்கோட்டை காமராஜர் மேற்கு வீதியில் பைப் லைன் அமைக்க தோண்டிய பள்ளம் மூடாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தோண்டிய பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் முகமது, நிலக்கோட்டை .------.......

சுகாதாரக்கேடை ஏற்படுத்தும் கழிவுநீர்

திண்டுக்கல் சின்னையாபுரம் ரயில்வே சுரங்க பாதையில் மழை நீருடன் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடை ஏற்படுத்துகிறது. இந்த வழியில் வாகன ஓட்டிகள் ஏராளமாக சென்று வருவதால் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாலட்சுமி, திண்டுக்கல்.......

------துார்வாராத கால்வாயால் அச்சம்

பழநி -திண்டுக்கல் ரோடு காலேஜ் பஸ் ஸ்டாப்பிலிருந்து இடும்பன் கோயில் செல்லும் ரோட்டில் சாக்கடை கால்வாய் துார் வாராமல் கழிவுநீர் தேங்கியுள்ளது. மழை நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. கால்வாய் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும். கோபி, பழநி.--------........

குப்பையால் சீர்கேடு

திண்டுக்கல் அனுமந்தநகரில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கலந்த குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மாடுகள் மேய்வதால் அவைகளும் பாதிக்கப்படுகின்றன. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முரளி, திண்டுக்கல்.

.....................................................






      Dinamalar
      Follow us