sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அபிராமி அம்மன் சிலை பூஜைக்கு போலீஸ் அனுமதி வழங்க மறுப்பு : ஹிந்து முன்னணி நிர்வாகி உட்பட 70 பேர் கைது

/

அபிராமி அம்மன் சிலை பூஜைக்கு போலீஸ் அனுமதி வழங்க மறுப்பு : ஹிந்து முன்னணி நிர்வாகி உட்பட 70 பேர் கைது

அபிராமி அம்மன் சிலை பூஜைக்கு போலீஸ் அனுமதி வழங்க மறுப்பு : ஹிந்து முன்னணி நிர்வாகி உட்பட 70 பேர் கைது

அபிராமி அம்மன் சிலை பூஜைக்கு போலீஸ் அனுமதி வழங்க மறுப்பு : ஹிந்து முன்னணி நிர்வாகி உட்பட 70 பேர் கைது


ADDED : மார் 08, 2025 01:34 AM

Google News

ADDED : மார் 08, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் ஹிந்து முன்னணி சார்பில் திண்டுக்கல் அபிராமி சிலை வைத்து பூஜை செய்ய போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் மாநில செயலாளர் செந்தில்குமார் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் புகழ் ஓங்கும் வகையில் அபிராமி அம்மன் பக்தர்கள் குழு, ஹிந்து முன்னணி சார்பில் வேடசந்துாரில் அபிராமி அம்மன் சிலையை வைத்து சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு நடந்தது. இதை தொடர்ந்து ஒன்றியத்திற்கு இரு இடங்கள் என முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்களே பூஜை செய்து வழிபடவும், இதன் தொடர்ச்சியாக ஏப்.,27-ல் திண்டுக்கல்லில் ஆன்மிக மாநாடு நடத்தவும் அதில் மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மாலை நடக்கவிருந்த பூஜைக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் அங்கு சென்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில பொருளாளர் பரமசிவம் தலைமையில் அபிராமி அம்மன் சிலை வைக்கப்பட்டிருந்த தனியார் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். பூஜையை முடித்து வெளியே வந்த இரு வழக்கறிஞர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து ஆத்து மேடு செல்லும் மெயின் ரோட்டில் மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில்ரோடு மறியலில் ஈடுபட்டனர். செந்தில்குமார் உள்ளிட்டோரை போலீசார் குண்டு கட்டாக துாக்கி சென்று கைது செய்தனர். இவருடன் 10 பெண்கள் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மன், சுவாமி சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

காடேஸ்வரா சுப்பிரமணியம் வருகை


செந்தில் குமார் கூறியதாவது: திண்டுக்கல் அபிராமி அம்மன், பக்தகிரீஸ்வரர் சுவாமி சிலைகளை வேடசந்துாரில் வைத்து சிறப்பு பூஜை செய்து முக்கிய ஊர்களில் உள்ள கோயில்களுக்கு எடுத்து சென்று பக்தர்களே பூஜை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி தராது ஹிந்து முன்னணி நிர்வாகிகள், பக்தர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாங்கள் ரத யாத்திரை கேட்கவில்லை. வழிபாட்டு உரிமையை தான் கேட்கிறோம். வழிபாடு என்பது ஹிந்துக்கள் உரிமை. இதற்கு அனுமதி மறுத்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். நாளை (இன்று) மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இதே பகுதிக்கு வந்து அபிராமி அம்மன் சிறப்பு பூஜையை துவக்கி கிராமங்களுக்கு எடுத்து செல்வார் என்றார்.






      Dinamalar
      Follow us