/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆதி பரஞ்சோதி மடத்தில் பிரத்யங்கிராதேவி யாகம்
/
ஆதி பரஞ்சோதி மடத்தில் பிரத்யங்கிராதேவி யாகம்
ADDED : ஆக 05, 2024 07:01 AM

கோபால்பட்டி : ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு உலக நன்மைக்காக சாணார்பட்டி மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை முதல் சபையில் வளர்க்கப்படும் 50க்கு மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை உணவுகள் வழங்கி கோ பூஜை நடந்தது.
மாலையில் மடத்தில் உள்ள யாகசாலையில் நரசிம்மர் கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பிரத்தியங்கிரா தேவி அம்மன் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடந்தது. சபை நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாகுண்டத்தில் மூடைகளில் மிளகாய் வத்தலை கொட்ட பிரத்தியங்கிரா தேவி யாகம் உலக நன்மை வேண்டி நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை பனை ஓலையில் எழுதி யாக குண்டத்தில் போட்டு பூஜை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.