/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குவாரி விதிமீறல் வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
குவாரி விதிமீறல் வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஏப் 24, 2024 12:26 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கடவகுறிச்சி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் துரைப்பாண்டி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
முசுவனுாத்துவில் கல்குவாரி நடத்த ஒருவருக்கு தமிழக அரசு உரிமம் வழங்கியது. அருகில் கடவகுறிச்சி மலை உள்ளது. இயற்கை வளத்தை பாதிக்கும் வகையில் உரிமம் வழங்கியது விதிமீறலாகும்.
அனுமதித்த பரப்பளவைவிட அருகிலுள்ள இடத்தில் விதிகளை மீறி குவாரி பணி நடக்கிறது. சக்தி வாய்ந்த வெடி பொருட்கள், கனரக வாகனங்களை பயன்படுத்தி கற்களை வெட்டி எடுக்கின்றனர்.
வன உயிரினங்கள், விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சட்டவிரோத குவாரிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு கனிமவளத்துறை இயக்குனர், திண்டுக்கல் கலெக்டர், நிலக்கோட்டை தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

