sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் விபத்து கம்பங்கள் அகற்றம்

/

'கொடை'யில் விபத்து கம்பங்கள் அகற்றம்

'கொடை'யில் விபத்து கம்பங்கள் அகற்றம்

'கொடை'யில் விபத்து கம்பங்கள் அகற்றம்


ADDED : ஜூன் 29, 2024 05:36 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானலில் தினமலர் செய்தி எதிரொலியாக விபத்தை ஏற்படுத்தும் கம்பங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் போலீஸ் அவுட் போஸ்ட் அருகே போலீஸ் டிராபிக் சிக்னல் கம்பத்துடன் கூடிய விளம்பர பதாகை சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி தாஸ் 55, பலியானார். சுரேஷ் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தியில் ஏராளமான கம்பங்கள், விளம்பர பதாகைகள் சரிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் ரோட்டோரம் ,பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் அமைக்கப்பட்ட விளம்பர பதாகைகள், கம்பங்கள் ,டிராபிக் சிக்னல் கம்பங்கள், விளம்பர பதாகைகள் அமைப்பதற்காக ஊன்றப்பட்ட கம்பங்களை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சத்தியநாதன், நகராட்சி கமிஷனர், கொடைக்கானல் : சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் நகர் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் தேவையற்ற விளம்பரப்பதாகை, வலு விழந்த கம்பங்கள், விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள சிக்னல்கள் கம்பங்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இப்பணிகள் தொடர்ந்து நடக்கும். மேலும் அனுமதியின்றி நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் அகற்றும் பணியும் தொடரும் என்றார்.






      Dinamalar
      Follow us