ADDED : செப் 05, 2024 05:28 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி ; சின்னாளபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் பிரதீபா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுசல்யாதேவி முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் சுரேஷ்குமார், சுகந்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
