/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தேர்வு
/
செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஆக 24, 2024 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இந்திய செஞ்சிலுவை சங்கம் திண்டுக்கல் மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.ஆண்டறிக்கை வரவு,செலவு கணக்குகள் வாசித்த பிறகு புதிய நிர்வாகிகள் தேர்தல் இந்தியன் ரெட் கிராஸ் திண்டுக்கல் மாவட்ட கிளை தலைவரான கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது.
கலெக்டர் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் முன்னிலை வகித்தார். உதவி தலைவராக கலெக்டர் நேர்முக உதவியாளர் முருகன்,அவைத்தலைவராக என்.எம்.பி. காஜாமைதீன், துணை அவைத் தலைவராக பொறியாளர் சேக்தாவுது, செயலாளராக ராஜகுரு, பொருளாளராக சுசிலாமேரி, மாவட்ட பிரதிநிதி சையதுஅபுதாகிர் 29, செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

