/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வளர்பிறை சதுர்த்தி விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
/
வளர்பிறை சதுர்த்தி விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
வளர்பிறை சதுர்த்தி விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
வளர்பிறை சதுர்த்தி விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : மார் 04, 2025 05:24 AM
திண்டுக்கல்: வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் செய்தனர்.
திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோயில்களில் சதுர்த்தி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். நேற்று வளர்பிறை சதுர்த்தி என்பதால் விநாயகருக்கு உகந்த நாளாக கருதப்பட்டது. இதனை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோயிலில் காலை 7:00 மணிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம் நடந்தது.
பலர் சதுர்த்தி விரதம் மேற்கொண்டு விநாயகரை தரிசித்தனர். திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோயிலில் அலங்காரம் நடந்தது.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர், சவுராஷ்டிராபுரம் விநாயகர், வாணிவிலாஸ் மேடு கலைக்கோட்டு விநாயகர், ரவுண்ட்ரோடு கற்பக விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், நடந்தது.
* செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில், சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.
பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.,
* சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில், சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.