ADDED : ஏப் 03, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்திரகாளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
கால பைரவருக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து சொர்ணாபிஷேகம், வடை மாலை சாத்துதல், பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் உள்ள காலபைரவர் கோயிலிலும் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது .

