sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழக்கமாகும் வெடிச்சத்தம் நேற்றும் கேட்டது

/

பழக்கமாகும் வெடிச்சத்தம் நேற்றும் கேட்டது

பழக்கமாகும் வெடிச்சத்தம் நேற்றும் கேட்டது

பழக்கமாகும் வெடிச்சத்தம் நேற்றும் கேட்டது


ADDED : ஆக 07, 2024 05:52 AM

Google News

ADDED : ஆக 07, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : திண்டுக்கல், வடமதுரை, நத்தம் பகுதியில் நேற்று காலை 11:10 மணிக்கு மீண்டும் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, தாமரைப்பாடி, எரியோடு, வேடசந்துார், நத்தம் ,சாணார்பட்டி பகுதியில் சில வார இடைவெளியில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது வாடிக்கையாக உள்ளது. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது போலவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வெடிச்சத்தத்திற்கு பின்னர் வெவ்வேறு பகுதிகளில் வசிப்போரிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரிக்கும் போது வெடிச்சத்தம் நீண்ட துாரத்திற்கு கேட்கிறது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

கல் குவாரிகளில் வெடி வைத்து தகர்க்கும் நேரத்தையொட்டியே இந்த வெடிச்சத்தம் கேட்கிறது. இதனால் பலமற்ற, பழமையாக கட்டடங்களில் விரிசல் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கல்குவாரி வெடிகளால் தான் பலத்த சத்தம் வருகிறது என்றால் வெடிப் பொருட்களின் அளவுகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us