sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காதல் திருமணம் செய்த சிறிது நேரத்தில் டூவீலர் திருட்டு வழக்கில் சிக்கிய வாலிபர்

/

காதல் திருமணம் செய்த சிறிது நேரத்தில் டூவீலர் திருட்டு வழக்கில் சிக்கிய வாலிபர்

காதல் திருமணம் செய்த சிறிது நேரத்தில் டூவீலர் திருட்டு வழக்கில் சிக்கிய வாலிபர்

காதல் திருமணம் செய்த சிறிது நேரத்தில் டூவீலர் திருட்டு வழக்கில் சிக்கிய வாலிபர்


ADDED : ஜூன் 26, 2024 07:01 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : காதல் திருமணம் செய்த சிறிது நேரத்தில் போலீசார் வாலிபரை டூவீலர் திருட்டு வழக்கில் கைது செய்தனர்.

வடமதுரை ஓம் சக்தி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வசந்த் 22. உடுமலைப்பேட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவியை காதலித்தார். பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் நேற்று காலை வடமதுரை கோயில் ஒன்றில் திருமணம் செய்தார் .

இதன் பின் பாதுகாப்பு கோரி மகளிர் போலீசில் தஞ்சமடைய டூவீலரில் புறப்பட்டார். அவ்வழியே வந்த விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் டூவீலரை மறித்து நிறுத்தினர். வசந்தை கைது செய்து வடமதுரை போலீசில் ஆஜர் செய்து விருதுநகருக்கு அழைத்து சென்றனர். விஷயம் தெரியாமல் காதல் மனைவி,பொதுமக்கள் திகைத்த நிலையில்,வசந்த் விருதுநகரில் டூவீலரை திருடியதால் அவரை பிடிக்க சாதாரண உடையில் போலீசார் வந்தது தெரிந்தது. காதல் மனைவியை மகளிர் போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us