ADDED : ஜூலை 15, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், ; திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா மேல்நிலைப்பள்ளியில் திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
தியாகராஜா கல்லுாரி தலைமையில் திண்டுக்கல், தேனி, கரூர் மூன்று மாவட்டத்தின் சார்பாக நடந்தது. 50க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவர்களுக்கு திருவாவடுதுறை ஆதீனம் திண்டுக்கல் பொறுப்பாளர் பரமேஸ்வரன், திருமுறை பாடகர் பிரவீன் குமார் பரிசுகளை வழங்கினர்.