sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விலை வீழ்ச்சியால் குப்பைக்கு போன தக்காளி

/

விலை வீழ்ச்சியால் குப்பைக்கு போன தக்காளி

விலை வீழ்ச்சியால் குப்பைக்கு போன தக்காளி

விலை வீழ்ச்சியால் குப்பைக்கு போன தக்காளி

1


ADDED : மார் 10, 2025 01:10 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:10 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் அய்யலுாரில் விலை வீழ்ச்சியால் ரோட்டோரங்களில் குப்பையாக கழிவு தக்காளி கிலோ கணக்கில் வீசப்படுகிறது.

தக்காளி விவசாயத்தில்முதலீடு, பராமரிப்பு செலவு குறைவு, நல்ல லாபம் தரக்கூடியது என்பதால் ஏராளமானோர் ஆர்வத்துடன் பயிரிடுகின்றனர். சில நாட்களாக தக்காளி வரத்து அதிகமானதால் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்தது.

சராசரியாக ரூ.400க்கு விற்கப்படும் 15 கிலோ எடை கொண்ட வீரிய ரக பெட்டிக்கு ரூ.170, ரூ.300க்கு விற்கப்படும் நாட்டு ரகத்திற்கு ரூ.80 வரை மட்டுமே தற்போது விலை கிடைக்கிறது. நாட்டுத் தக்காளி ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்காமல் அழுகிடும் என்பதால் அதன் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது.

அய்யலுார் கமிஷன் மண்டிகளுக்கு தற்போது வரத்து அதிகமாகி, விலை வெகுவாக குறைந்ததால் அதிகளவில் சுமாரான பழங்களை கழிவாக மாற்றி அகற்றுகின்றனர். விலை உச்ச நேரத்தில் கழிவு பழங்களாக மாற்றப்படுவது மிக சொற்பமாக இருக்கும்.

5 ரூபாய் நாணய அளவில் இருக்கும் பழம் கூட தெருக்களில் கூறுக்கட்டி விற்பர். உடைந்த பழங்கள் ஓட்டல்களுக்கு சென்றுவிடும். தற்போது கமிஷன் மண்டிகளில் ஏற்படும் அதிகளவு கழிவு பழங்கள், சரக்கு வேன் வியாபாரிகளால் விற்க முடியாமல் வீணாகும் பழங்கள் திண்டுக்கல் -திருச்சி ரோட்டோரத்தில்இரவு நேரங்களில் கொட்டப்படுகின்றன.

இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us