sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போக்குவரத்திற்கு இடையூறாக மரங்கள் வெட்டி குவிப்பு; மரக்கடத்தலை கண்டுகொள்ளாத வனத்துறை

/

போக்குவரத்திற்கு இடையூறாக மரங்கள் வெட்டி குவிப்பு; மரக்கடத்தலை கண்டுகொள்ளாத வனத்துறை

போக்குவரத்திற்கு இடையூறாக மரங்கள் வெட்டி குவிப்பு; மரக்கடத்தலை கண்டுகொள்ளாத வனத்துறை

போக்குவரத்திற்கு இடையூறாக மரங்கள் வெட்டி குவிப்பு; மரக்கடத்தலை கண்டுகொள்ளாத வனத்துறை

1


ADDED : பிப் 27, 2025 01:32 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:32 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி; மரக்கடத்தலை கண்டுகொள்ளாத வனத்துறையால் தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக மரங்கள் குவிக்கப்படுவதால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

இம்மலைப் பகுதியில் ஆர்ஜின் பெர்மிட் அடிப்படையில் முருங்கை மரங்கள் வெட்டப்படுகின்றன.இதற்கு வனத்துறை முறையாக ஆய்வு செய்யாமல்அனுமதி அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன . இவ்வாறாக வெட்டப்படும் மரங்கள் குறிப்பிட்ட இடங்களில் வெட்டப்படாமல் இஷ்டம் போல் வெட்டப்படும் நிலை உள்ளது. ரோட்டோரம் இவற்றை போக்குவதற்கு இடையூறாக குவிப்பதை வாடிக்கையாகவும் கொண்டுள்ளனர்.மரங்கள் விற்பனைக்கு எடுத்து செல்ல வனத்துறை சம்பந்தப்பட்ட பட்டா இடங்களில் இருந்து மரங்களை எடுத்து செல்ல வேண்டும் என விதிமுறைகளை வகுத்துள்ளனர்.

வியாபாரிகள் தங்களது சுயநல நோக்கத்திற்காக போக்குவரத்து ரோட்டில் குவித்து இடையூறை ஏற்படுக்கின்றனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் ரோட்டோரங்கள் சேதமடைகின்றன.

மேலும் இந்த ரோட்டில் சில மாதங்களுக்கு முன் பி.எஸ்.என்.எல்., கேபிள் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இப்பகுதி விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இவற்றை முறையாக மூடப்படாத நிலையில் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாமல் அவ்வப்போது வாகனங்கள் பள்ளத்தில் சிக்க போக்குவரத்து பாதிக்கிறது. இந்நிலையில் மங்களம்கொம்பு தடியன்குடிசை இடையே 5. கி. மீ., ரோட்டில் இஷ்டம்போல் மரங்களை குவிப்பதால் நாள் தோறும் வாகனங்கள் அவதியடைகின்றன. இடையூறு குறித்து வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கும் நிலையில் வனத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. மரக் குவியலை கடந்து செல்லும் வாகனங்கள் மரங்களால் ஏற்படும் இடையூறு குறித்து வியாபாரிகளிடம் கூறும் நிலையில் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழலில் நாள்தோறும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தாமதமான நிலையிலே கிராம பகுதியை வந்தடைகின்றன.

மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் கூறுகையில் ,''போக்குவரத்திற்கு இடையூறாக மரங்களை குவிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீறி இது போன்ற செயலில் ஈடுபடுவேர் மீது நடவடிக்கை எடுத்து அனுமதி ரத்து செய்யப்படும்.

முருங்கை மரம் வெட்ட அனுமதி பெற்று சோலை மரங்களை கடத்தப்படும் நிலையில் வன பாதுகாப்பு படை மூலம் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றார்.






      Dinamalar
      Follow us