sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நலன் காக்கும் முதல்வர்: அமைச்சர் ஐ.பெரியசாமி

/

நலன் காக்கும் முதல்வர்: அமைச்சர் ஐ.பெரியசாமி

நலன் காக்கும் முதல்வர்: அமைச்சர் ஐ.பெரியசாமி

நலன் காக்கும் முதல்வர்: அமைச்சர் ஐ.பெரியசாமி


ADDED : ஜூலை 16, 2024 04:09 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி : ''அனைவரின் நலன் காக்கும் முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார்'' என, அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

காந்திகிராமம் அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:

பசி இல்லாத மாணவர்களின் கற்றலை மேம்படுத்தலால் கல்வித்தரம் உயரும்.

தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி கடைக்கோடி மக்கள் வரை திட்டங்கள் சென்றடைய முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அனைவரின் நலன் காக்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றார். கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.

திட்ட இயக்குனர் திலகவதி, முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன், ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன், காந்திகிராம அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அமுதா, பி.டிஓ., க்கள் குமரவேல், அருள்கலாவதி பங்கேற்றனர்.

சாணார்பட்டி:- சாணார்பட்டி அருகே கோணப்பட்டியில் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்க விழா மேற்கு மாவட்ட தி.மு.க., பொருளாளரும் மாவட்ட கவுன்சிலருமான க.விஜயன் தலைமையில் நடந்தது. காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைத் தலைவர் ராமதாஸ், ஒன்றிய ஆணையாளர் சுமதி,வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், காலை உணவு திட்ட வட்டார இயக்க மேலாளர் பிரமிளாதேவி, தலைமை ஆசிரியர் தீபன்பாஸ்கர் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம்: கள்ளிமந்தையம் சி.எஸ். ஐ., அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 21 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை, பழுதடைந்த வீடுகள் பராமரிப்பு பணிகளுக்காக 12 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:

தமிழ்நாட்டினை குடிசை இல்லா மாநிலமாக உருவாக்க கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 8 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட உள்ளது. முதல் கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் வழங்கப்பட உள்ளது சேதமடைந்த வீடுகளை பராமரிக்க ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுஎன்றார்.

மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், ஆர்.டி.ஓ., சரவணன், கல்வி அலுவலர் சண்முகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாஹிரா, வேதா, தாசில்தார்கள் சசி, முத்துசாமி, தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய துணைத் தலைவர் தங்கம் கலந்து கொண்டனர்.

பழநி: பழநி கலிக்க நாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி, வானம் நடுநிலைப் பள்ளியில், காலை உணவு திட்டத்தினை எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார்.அதன் பின் ஆசிரியர்களுக்கு விலையில்லா டேப் வழங்கினார். தாசில்தார் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us