sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாரத்தான், விளையாட்டு போட்டிகளுடன் மகளிர் தின விழா கொண்டாட்டம்

/

மாரத்தான், விளையாட்டு போட்டிகளுடன் மகளிர் தின விழா கொண்டாட்டம்

மாரத்தான், விளையாட்டு போட்டிகளுடன் மகளிர் தின விழா கொண்டாட்டம்

மாரத்தான், விளையாட்டு போட்டிகளுடன் மகளிர் தின விழா கொண்டாட்டம்


ADDED : மார் 09, 2025 03:55 AM

Google News

ADDED : மார் 09, 2025 03:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் மாரத்தான், விளையாட்டு போட்டிகளுடன் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்தன.

மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் செயலி 181 ஐ வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. எஸ்.பி., பிரதீப் துவங்கி வைத்தார். தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகே தொடங்கிய மாரத்தான் ஓட்டம் ஏ.எம்.சி., ரோடு, காட்டாஸ்பத்திரி, திருச்சி ரோடு வழியாக சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நிறைவடைந்தது.

*திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறை சார்பில் மகளிர் தின விழா விளையாட்டுப் போட்டிகள் டி.ஆர்.ஓ., ஜெயபாரதிதலைமையில் நடைபெற்றது. அனைத்து துறை அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். திட்ட இயக்குனர் திலகவதி, தாசில்தார்கள் சுகந்தி, சந்தனமேரிகீதா முன்னிலை வகித்தனர்.

* தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பாக பழநி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்க நிர்வாகி மணிமொழி தலைமை வகித்தார்.

வருவாய்துறை அலுவலர் சங்க நிர்வாகி மல்லிகா வரவேற்றார். மாவட்ட துணைச்செயலர் வேலம்மாள் முன்னிலை வகித்தார்.

மேயர் இளமதி பேசினார். அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் பொதுச் செயலாளர் தேவேந்திரன்,மாநில செயலாளர் கார்த்திகேயே வெங்கடேசன், மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, துணைத் தலைவர் கலந்து கொண்டனர்.

*வேடசந்துார்: அமைதி அறக்கட்டளை, சமூக நலத்துறை, காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து உலக மகளிர் தினம், குழந்தைகள்,பெண்களுக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் விருதலைப்பட்டியில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளர் திவ்யா வரவேற்றார். மேலாளர் சீனிவாசன், வி.ஏ.ஓ., மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

டாக்டர்கள் சுகுணா, இளவரசி, ஐஸ்வர்ய சர்மிளா, ரஷிஹாஸ் ஸ்ரீ பேசினர்.






      Dinamalar
      Follow us