sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வடமதுரை அருகே தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

/

வடமதுரை அருகே தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

வடமதுரை அருகே தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

வடமதுரை அருகே தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு


ADDED : ஆக 04, 2024 10:56 PM

Google News

ADDED : ஆக 04, 2024 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொல்லப்பட்டி ஜி.குரும்பபட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக்கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு பங்காளிகள் அழைப்புடன் விழா துவங்கியது. நேற்று அதிகாலை பாரம்பரிய வழிபாடுகள் முடித்தது. விரதமிருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் நேற்று காலையில் கோவில் முன் அமர்ந்தனர்.

பூஜாரி லோகநாதன் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். பின், சேர்வைகாரர்களிடம் பக்தர்கள் சாட்டையடி பெற்று, கோவிலுக்குள் சென்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் முருகேசன், செயலர் மீர்ராஜ், பொருளாளர் பெருமாள் செய்தனர்.






      Dinamalar
      Follow us