/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம்
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED : ஜூன் 25, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக நேற்று வருடாபிஷேகம் நடந்தது.
பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் கொண்டு புன்யாவஜனம், அக்னி, மகாலட்சுமி, லட்சுமிநரசிம்மர், பஞ்ச கந்த, சாந்தி யாக பூஜைகள் நடந்தன. மாலையில் திருக்கல்யாணம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.