sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் 3 மணி நேரம் நெரிசல் : கனமழையால் பரிதவித்த பயணிகள்

/

'கொடை'யில் 3 மணி நேரம் நெரிசல் : கனமழையால் பரிதவித்த பயணிகள்

'கொடை'யில் 3 மணி நேரம் நெரிசல் : கனமழையால் பரிதவித்த பயணிகள்

'கொடை'யில் 3 மணி நேரம் நெரிசல் : கனமழையால் பரிதவித்த பயணிகள்


ADDED : நவ 03, 2024 03:15 AM

Google News

ADDED : நவ 03, 2024 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசலுக்குடையே கனமழை கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் ஏராளமான பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். பெருமாள்மலை கொடைக்கானல் நீர்வீழ்ச்சியை கடக்க 2 மணி நேரம் என்ற அளவுக்கு பயணிகளின் வாகனங்கள் வந்தன.

இரண்டு நாட்களாக நீடித்த போக்குவரத்து நெரிசலால் பயணிகள் துயரத்தை சந்தித்தனர். சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்தும் பயனில்லை. இதனால் போக்குவரத்து போலீசாரும் திணறினர். நேற்று நெரிசலில் ஒரு வழியாக கொடைக்கானலில் வந்தடைந்த பயணிகள் ஒரு சில சுற்றுலா தலங்களை பார்வையிட்ட நிலையில் மதியம் 3:00 மணிக்கு துவங்கிய மழை 6:00 மணி வரை வெளுத்துத்து வாங்கியது.

இதனால் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கினர். ஒருபுறம் போக்குவரத்து நெரிசல், மறுபுறம் தொடர்மழை என பயணிகள் அவதிக்குள்ளானர்.






      Dinamalar
      Follow us