/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் அருகே விதி மீறிய 5 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
/
திண்டுக்கல் அருகே விதி மீறிய 5 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே விதி மீறிய 5 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே விதி மீறிய 5 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
ADDED : அக் 19, 2025 03:37 AM
திண்டுக்கல்: தமிழக அரசுக்கு கட்டவேண்டிய வரியை செலுத்தாமல் விதிமீறலாக பயணிகளை ஏற்றிவந்த ஐந்து ஆம்னி பஸ்களை திண்டுக்கல்போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
தீபாவளி பண்டிகை யொட்டி பலரும் சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். இதனால் பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் கூடுதல் சிறப்பு பஸ்கள், தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. அரசு பஸ், ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ்களில் செல்ல முனைப்புக்காட்டி வருகின்றனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்னி பஸ் நிறுவனத்தினர் அதிகம் பயணக்கட்டணம் வசூலித்தனர். இதுகுறித்து புகார் எழுந்ததும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆம்னி பஸ்கள் கட்டணத்தை குறைத்தது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இதை தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா என்பதை கண்டுபிடித்து விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது அபராதம், பறிமுதல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகே திண்டுக்கல் வட்டார வாகன போக்குவரத்து அதிகாரி கண்ணன், பழநி வட்டார போக்குவரத்து அதிகாரி ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், இளங்கோ, சண்முக ஆனந்த், ஈஸ்வரன் குழுவினர் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற 5 ஆம்னி பஸ்களை தடுத்து நிறுத்தி தணிக்கை செய்ததில் அந்த பஸ்கள் தமிழக அரசுக்கு கட்டவேண்டிய வரியை கட்டாமல் விதிமீறலில் பயணிகளை ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.47 ஆயிரத்து 500 அபராதம், வரி பாக்கி ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து, 918 விதித்து வசூலித்தனர்.