sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

முன்னாள் வங்கி ஊழியர் கொலையில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 7 பேர் கைது கடனை திருப்பி தராததால் ஆத்திரம்

/

முன்னாள் வங்கி ஊழியர் கொலையில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 7 பேர் கைது கடனை திருப்பி தராததால் ஆத்திரம்

முன்னாள் வங்கி ஊழியர் கொலையில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 7 பேர் கைது கடனை திருப்பி தராததால் ஆத்திரம்

முன்னாள் வங்கி ஊழியர் கொலையில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 7 பேர் கைது கடனை திருப்பி தராததால் ஆத்திரம்


ADDED : டிச 11, 2024 02:48 AM

Google News

ADDED : டிச 11, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.லட்சக்கணக்கில் பெற்ற கடனை திருப்பி தராததால் முன்னாள் வங்கி ஊழியர் பாலமுருகனை கடத்தி கை, கால்களை கட்டி கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் பாலமுருகன். இவர் திண்டுக்கல் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த கார்த்திக்குமார் 46, முள்ளிப்பாடி திருப்பதி 36, ஆர்.எம்.காலனி முத்துக்குமார் 28, பொன்மாந்துறை முன்னாள் ராணுவ வீரர் ஜெஸ்டின்ராஜா 34, மேட்டுப்பட்டி சார்லஸ் 34, அம்மாபட்டி பன்னீர்செல்வம் 28, விக்னேஷ் 32, ஆகியோரிடம் ரூ.லட்சக்கணக்கான பணத்தை கடனாக பெற்று அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அவர்களும் அதை நம்பி கடனை கொடுத்தனர். பல மாதங்களாகியும் பாலமுருகன் கடனையும், வட்டியையும் கொடுக்கவில்லை. கடன் கொடுத்தவர்கள் கேட்டும் பாலமுருகன் ஏமாற்றி வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெஸ்டின்ராஜா உள்ளிட்ட 7 பேரும் பாலமுருகனை டிச., 5 கடத்தி 3 நாட்களாக கஸ்டடியில் வைத்து சித்ரவதை செய்து நேற்று முன்தினம் திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் கண், கை, கால்களை கட்டி கொலை செய்து வீசினர்.

போலீசார் விசாரித்து 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us