ADDED : ஆக 22, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ., அருண்நாராயணன்,தனிப்பிரிவு போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டபோது செந்துறை பிரிவு பகுதி குப்பை கிடங்கு அருகே 8 பேர் கொண்ட கும்பல் கஞ்சா விற்பனை செய்தது. அவர்களை
விசாரித்ததில் நத்தம் அண்ணாநகரை சேர்ந்த பிரவீன்குமார் 22,செட்டியார் குளத்தெருவை சேர்ந்த செல்வபிரகாஷ் 23, நத்தத்தை சேர்ந்த ஆசிக்அலி 24 ,முகமது மஸ்தான் 24 , மதுரை புதுாரை சேர்ந்த அஜீத்மீரான் 28, பெரியகுளத்தை சேர்ந்த ஆகாஷ் 21, நத்தம் இந்திரா நகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் 20,விஷ்ணு 23, என்பது தெரிய வர இவர்களை கைது செய்தனர்.