ADDED : பிப் 19, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் அடிவாரம் கிரிவீதி, அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. வின்ச், ரோப்கார் மூலம் மலைக்கோயில் செல்லவும், சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

