sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி; குறைதீர் கூட்டத்தில் புகார்

/

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி; குறைதீர் கூட்டத்தில் புகார்

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி; குறைதீர் கூட்டத்தில் புகார்

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி; குறைதீர் கூட்டத்தில் புகார்


ADDED : பிப் 20, 2024 06:12 AM

Google News

ADDED : பிப் 20, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:நிதி நிறுவனம் நடத்தி ரூ.பல கோடி மோசடி என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 340 பேர் முறையிட்டனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டதில்,இதன் மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.

முஸ்லிம் பெண்கள், சிறுபான்மையினர் சுயதொழில் தொடங்குவதற்கு திண்டுக்கல் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் 2022--23-ம் ஆண்டிற்கான நன்கொடையிலிருந்து 72 பயனாளிகளுக்கு ரூ.8.10 லட்சம் மதிப்பிலான சிறுதொழில் உதவித்தொகைக்கான காசோலைகள், இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சரவணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காகவுரி கலந்து கொண்டனர்.

நிதி நிறுவனம் மோசடி


தினசரி சிறுசேமிப்பு திட்டம் பெயரில் மக்களிடம் கோடிக்கணக்கில் வரை பண மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் அளித்த மனுவில், மதுரையை தலைமை இடமாகக் கொண்டு கோவை, திண்டுக்கல் என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எஸ்.எம்.சி., கூட்டுறவு சொசைட்டி என்ற பெயரில் தனியார் கூட்டுறவு வங்கி செயல்பட்டது.

தினசரி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் மக்களிடம் தினசரி ரூ.100 ரூபாய் முதல் ரூ.1000 ரூபாய் வரை பணம் வசூல் செய்தனர். 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். சில நாட்களாக நிதி நிறுவனம் பூட்டி நிலையிலேயே உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளனர்.

கோழிக்கழிவுகளால் சுகாதாரக்கேடு


திண்டுக்கல் மதுரை ரோடு பாத்திமா நகர், சி.கே.சி.எம்., நகர், கரீம் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சில தனியார் நிறுவனங்கள் கோழிக்கழிவுகளை பதப்படுத்தி அரைத்து வருகின்றன.

இதானல் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய்தொற்று சூழல் நிலவுகிறது. புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உரிய தீர்வு காண கேட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us