/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் துவங்கியது ஆன்மிக பயணம்
/
பழநியில் துவங்கியது ஆன்மிக பயணம்
ADDED : டிச 18, 2024 04:45 AM

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவிலில் இருந்து ஹிந்து சமய அறநிலை துறையின் அறுபடை வீடு ஆன்மிகப்பயணம் துவங்கியது.
பழநி தண்டபாணி நிலையத்திலிருந்து துவங்கிய இப்பயணத்தில் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மண்டல பக்தர்கள் 210 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக இவர்கள் நேற்று முன் தினம் பழநி வந்து இரவு தங்கினர். நேற்று காலை பழநி முருகன் கோவிலில் தரிசனம் செய்தனர். ஆன்மிக பயணத்தை சப் கலெக்டர் கிஷண் குமார் துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, கோவில் துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி பயணிகளை வழி அனுப்பினர்.
இவர்கள் திருப்பரங்குன்றம், திருசெந்துார், சோலைமலை, சுவாமி மலை, திருத்தணி முருகன் கோவில்களில் தரிசனம் முடித்து டிச., 20 திரும்புகின்றனர்.