sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வடமதுரையில் விபத்து பள்ளத்திற்கு விடிவு

/

வடமதுரையில் விபத்து பள்ளத்திற்கு விடிவு

வடமதுரையில் விபத்து பள்ளத்திற்கு விடிவு

வடமதுரையில் விபத்து பள்ளத்திற்கு விடிவு


ADDED : மார் 22, 2025 04:35 AM

Google News

ADDED : மார் 22, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரையில் டூவீலர்களை பாடாய்படுத்திய விபத்து பள்ளம் தினமலர் செய்தி எதிரொலியாக மூடப்பட்டது.

வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செங்குறிச்சி ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இருபக்கமும் வர்த்தக நிறுவனங்கள் மண் நிரப்பி உள்ளதால் மழை நேரத்தில் ரோட்டில் பாயும் நீர் வேகத்தடை பகுதியில் தேங்குவதால் விரைவில் இப்பகுதி ரோடு சேதமடைந்து பள்ளமாகிறது.

உயரமான வேகத்தடையும், அதன் அருகிலே மெகா பள்ளமும் இருப்பதால் டூவீலர்கள் நிலை தடுமாறி அதிகளவு விபத்தில் சிக்கின.

இது தொடர்பாக தினமலர் நாளிதழ் 'இன்பாக்ஸ்' பகுதியில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத் துறையினர் ரோடை தார் கலவை கொண்டு சீரமைத்தனர். இதனால் இவ்வழியே டூவீலர், கார், கனரக வாகனங்களில் கடந்து செல்வோர் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us