sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திறந்த நிலை மின் மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம்

/

திறந்த நிலை மின் மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம்

திறந்த நிலை மின் மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம்

திறந்த நிலை மின் மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம்


ADDED : பிப் 12, 2025 03:58 AM

Google News

ADDED : பிப் 12, 2025 03:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியாத சிக்னல் விளக்குகள் : திண்டுக்கல் -பழநி ரோட்டில் சிக்னல் விளக்குகள் சரிவர எரியாததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். விபத்துக்களும் நடக்கின்றன. விளக்குகளை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--மணிமாறன்,திண்டுக்கல்.

வீணாகும் குப்பை தொட்டி : நத்தம் அருகே புதுப்பட்டியில் பயன்படுத்தப்படாமல் குப்பை சேகரிப்பு தொட்டி துருப்பிடித்து வீணாகிறது. இதனால் குப்பையை பொதுமக்கள் தெருக்களில் கொட்டுவதால் சுகாதாரப் பிரச்னை ஏற்படுகிறது. முறையாக பராமரிக்க வேண்டும்.

-முருகன், புதுப்பட்டி.

சாக்கடையில் தேங்கும் கழிவுநீர் : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணைப்பட்டி ஊராட்சி தெத்துப்பட்டியில் அங்கன்வாடி மையம் எதிரே வடிகால் வசதியின்றி கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

-எம்.ஜோதிமுருகன், தெத்துப்பட்டி.

திறந்த நிலையில் மீட்டர் பெட்டி : திண்டுக்கல் குடைப்பாறை பட்டி பள்ளப்பட்டி ரோட்டில் திறந்த நிலையில் உள்ள மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம் உள்ளது .மீட்டர் பெட்டி தாழ்வாக தொடும் துாரத்தில் உள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதை புதுப்பிக்க வேண்டும்.

-மனோஜ், திண்டுக்கல்.

சாக்கடையில் தேங்கும் கழிவுநீர் : திண்டுக்கல் பூ மார்க்கெட் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது .பூக்கள் வாங்க அதிக அளவில் மக்கள் வந்து செல்வதால் இதை துார்வார வேண்டும்.

-வினோத்குமார் திண்டுக்கல்.

குப்பையால் சுகாதாரக்கேடு : பழநி இடுபன்குளம் அருகே பக்தர்கள் நீராடும் பகுதியில் குப்பை குவிந்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் பக்தர் முகம் சுளிக்கின்றனர். குப்பையை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கராஜ், பழநி.

மண்டியுள்ள மர இலைகள் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் நீர் வடிகால் பகுதியில் மர இலைகள் மண்டியுள்ளது. மழை நேரங்களில் நீர் செல்ல முடியாமல் தேங்குகிறது . கால்வாயில் அடைத்திருக்கும் இலைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம்முன் வர வேண்டும்.

-செந்தில்குமார், திண்டுக்கல்.






      Dinamalar
      Follow us