sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நாய்கள் தொல்லையால் தொடரும் விபத்து; பழநி 12வது வார்டில் வாகன ஓட்டிகள் அவதி

/

நாய்கள் தொல்லையால் தொடரும் விபத்து; பழநி 12வது வார்டில் வாகன ஓட்டிகள் அவதி

நாய்கள் தொல்லையால் தொடரும் விபத்து; பழநி 12வது வார்டில் வாகன ஓட்டிகள் அவதி

நாய்கள் தொல்லையால் தொடரும் விபத்து; பழநி 12வது வார்டில் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மே 11, 2025 06:46 AM

Google News

ADDED : மே 11, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : நாய்கள் தொல்லையால் தினமும் விபத்து , சேதமான சாக்கடைகளால் அவதி என பழநி நகராட்சி 12 வது வார்டு மக்கள் தவியாய் தவிக்கின்றனர்.

ராஜாஜி ரோடு, ஒன்று முதல் ஐந்து வரை குறுக்குத் தெருக்களை உடைய இந்த வார்டில் சாலை நகரை இணைக்கும் முக்கிய சாலையான பழைய தாராபுரம் சாலையுடன் இணைகிறது. சாலையின் ஓரங்களில் சாக்கடைகள் சேதமடைந்துள்ளன. இறைச்சி கடைகள் அதிகம் உள்ளதால் இறைச்சி கழிவுகள் அதிகம் சேர சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மேலும் சாலைகளில் திரியும் மாடு,குதிரைகளால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

நோய் தொற்று அபாயம்


வேலுச்சாமி, சாலையோர வியாபாரி, ராஜாஜி ரோடு : எங்கள் பகுதியில் நாய் தொல்லை அதிகளவில் உள்ளது. சாலையில் நடுவே நாய்கள் ஓடி திரிவதால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நோயுடன் நாய்கள் சுற்றி திரிவதால் நோய் தொற்று அபாயமும் ஏற்படுகிறது. குழந்தைகள் முதியவர்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயரமான சாக்கடை


ஈஸ்வரி,குடும்பத் தலைவி, ராஜாஜி ரோடு : எங்கள் பகுதியில் சாக்கடை உயரமாக உள்ளது. பல இடங்களில் சாக்கடை குழிகள் திறந்த நிலையில் உள்ளன. அதற்கான மூடிகள் அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். மழை காலம் வருவதற்குள் இங்கு பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டால் சாக்கடை நீர் வீட்டிற்குள் புகுவதை தடுக்கலாம். கால்நடைகள் ரோட்டில் திரிவதை தடுக்க வேண்டும்.

கொசுத்தொல்லையும் அதிகரிப்பு


விஜய பிரபாகரன்,கறிக்கடை உரிமையாளர், ராஜாஜி ரோடு : எங்கள் பகுதியில் சாலையோர மர கிளைகள் வீட்டின் மேல் பகுதியில் படர்ந்துள்ளது. இதில் உள்ள புழுக்கள் பூச்சிகள் வீட்டின் உள் விழுகின்றன இதனால் தோல் அலர்ஜி நோய் தொற்று உள்ளிட்டவை ஏற்படுகிறது. மேலும் மரக்கிளைகள் காரணமாக கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக சிரமம் ஏற்படுகிறது.

மரக்கிளை அகற்றப்படும்


முருகேசன், கவுன்சிலர், (வி.சி.க.,) : இந்திரா நகரை இணைக்கும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் முறையாக இயங்குகிறது. சாக்கடைகளில் வரும் மழை நீர் வீடுகளுக்குள் புகாமல் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பழைய தாராபுரம் ரோட்டில் சேதம் அடைந்த பகுதியை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை இடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நாய் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அங்கன்வாடி மையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கறிக்கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க நகராட்சியிடம் கோரப்பட்டுள்ளது.

மர கிளைகளை வெட்டி சரி செய்யவும் நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us