/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகளில் மழைநீரால் விபத்துக்கள் அதிகரிப்பு
/
சேதமான ரோடுகளில் மழைநீரால் விபத்துக்கள் அதிகரிப்பு
சேதமான ரோடுகளில் மழைநீரால் விபத்துக்கள் அதிகரிப்பு
சேதமான ரோடுகளில் மழைநீரால் விபத்துக்கள் அதிகரிப்பு
ADDED : நவ 12, 2024 05:33 AM

கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபத்திய சாரல் மழைக்கே தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட ரோடுகள் பள்ளம் மேடாக மாற பரவலாக மழை நீர் தேங்க துவங்கி உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முதுகு தண்டுவட பாதிப்பு மட்டுமின்றி இரவு நேர விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள்,கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் என 1100க்கு மேற்பட்ட கி.மீ., துார ரோடுகள் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளன. இவை தவிர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகள் அமைப்புகளின் வசமும் ரோடுகள் உள்ளன.இவற்றின் சீரமைப்பு, பராமரிப்பிற்கென நிதி ஒதுக்கீடு தொடர்ந்த போதும் அதிகாரிகள் அலட்சியத்தால் பெருமளவு இடங்களில் பராமரிப்பு கண்டுகொள்ளப்படுவது இல்லை. இதன் விளைவாக ரோடுகள் சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைப்பில் அலட்சியம் வாடிக்கையாகிவிட்டது. சாரல் மழைக்கும் ரோடுகள் சேதமடைவது வழக்கமாகிவிட்டது. சில வாரங்களுக்கு முன் பெய்த சாரல் மழையின்போது மாவட்டத்தில் பரவலாக கிராமங்கள் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை அனைத்து ரோடுகளும் சேதமடைய துவங்கி விட்டன.
பல இடங்களில் ரோடுகள் பெயர்ந்து பள்ளம் மேடா மாறி மழை நீர் தேங்கி உள்ளது. இரவு நேர டூவீலர் பயணம் அனைத்து வகை ரோடுகளிலும் விபத்து அபாயத்தை உருவாக்கி வருகின்றன. மழை நீரால் அரிக்கப்பட்ட ரோட்டாரங்கள் மட்டுமின்றி பரவி உள்ள பள்ளங்களும் விபத்துக்களை ஏற்படுத்த தவறவில்லை. மழைநீரால் ரோடு சேதத்தின் தாக்கத்தை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் கண்காணிப்பை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும்.

