sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சேதமான ரோடுகளில் மழைநீரால் விபத்துக்கள் அதிகரிப்பு

/

சேதமான ரோடுகளில் மழைநீரால் விபத்துக்கள் அதிகரிப்பு

சேதமான ரோடுகளில் மழைநீரால் விபத்துக்கள் அதிகரிப்பு

சேதமான ரோடுகளில் மழைநீரால் விபத்துக்கள் அதிகரிப்பு


ADDED : நவ 12, 2024 05:33 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபத்திய சாரல் மழைக்கே தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட ரோடுகள் பள்ளம் மேடாக மாற பரவலாக மழை நீர் தேங்க துவங்கி உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முதுகு தண்டுவட பாதிப்பு மட்டுமின்றி இரவு நேர விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள்,கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் என 1100க்கு மேற்பட்ட கி.மீ., துார ரோடுகள் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளன. இவை தவிர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகள் அமைப்புகளின் வசமும் ரோடுகள் உள்ளன.இவற்றின் சீரமைப்பு, பராமரிப்பிற்கென நிதி ஒதுக்கீடு தொடர்ந்த போதும் அதிகாரிகள் அலட்சியத்தால் பெருமளவு இடங்களில் பராமரிப்பு கண்டுகொள்ளப்படுவது இல்லை. இதன் விளைவாக ரோடுகள் சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைப்பில் அலட்சியம் வாடிக்கையாகிவிட்டது. சாரல் மழைக்கும் ரோடுகள் சேதமடைவது வழக்கமாகிவிட்டது. சில வாரங்களுக்கு முன் பெய்த சாரல் மழையின்போது மாவட்டத்தில் பரவலாக கிராமங்கள் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை அனைத்து ரோடுகளும் சேதமடைய துவங்கி விட்டன.

பல இடங்களில் ரோடுகள் பெயர்ந்து பள்ளம் மேடா மாறி மழை நீர் தேங்கி உள்ளது. இரவு நேர டூவீலர் பயணம் அனைத்து வகை ரோடுகளிலும் விபத்து அபாயத்தை உருவாக்கி வருகின்றன. மழை நீரால் அரிக்கப்பட்ட ரோட்டாரங்கள் மட்டுமின்றி பரவி உள்ள பள்ளங்களும் விபத்துக்களை ஏற்படுத்த தவறவில்லை. மழைநீரால் ரோடு சேதத்தின் தாக்கத்தை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் கண்காணிப்பை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும்.

ஏட்டளவு பணிகளால் விபத்து

காமலாபுரம்-மெட்டூர் இடையே புதிய தடத்தில் நான்குவழிச்சாலை பணி நடக்கிறது. அதேவேளையில் பழைய வழித்தடமும் ரூ. பல கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதிக போக்குவரத்து உள்ள ரோடு பராமரிப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற சூழல் மாவட்டம் முழுவதும் உள்ளது. மழைநீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கி உள்ளது. ரோடு சேதமடைந்து பள்ளங்கள் உருவாகி உள்ளன. டூவீலர்களில் செல்வோர் பள்ளங்களால் நிலைதடுமாறுகின்றனர். சமீபத்திய அதிகப்படியான விபத்துகளுக்கு பராமரிப்பற்ற ரோடு சார்ந்த பிரச்னைகளே காரணமாக அமைந்துள்ளன. ஏட்டளவு பணிகளால் விபத்துக்கள் தாராளமாக தொடர்கிறது. சேதமடைந்த பகுதிகளில் பேட்ஜ்-ஒர்க் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பரமசிவம் ,விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி, கன்னிவாடி...........--








      Dinamalar
      Follow us