/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனைத்து ரேஷன் கடைகளிலும் நிழற் கூரை: அமைச்சர் சக்கரபாணி
/
அனைத்து ரேஷன் கடைகளிலும் நிழற் கூரை: அமைச்சர் சக்கரபாணி
அனைத்து ரேஷன் கடைகளிலும் நிழற் கூரை: அமைச்சர் சக்கரபாணி
அனைத்து ரேஷன் கடைகளிலும் நிழற் கூரை: அமைச்சர் சக்கரபாணி
ADDED : அக் 08, 2025 08:10 AM

ஒட்டன்சத்திரம் : அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு நிழற்கூரை அமைக்கப்படும் ''என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பு நிழற்கூரை,பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி செய்யப்படும்.
ரே ஷன் கடைகளில் சில்வர் பாத்திரங்களில் குடிமை பொருட்களை வைத்து வழங்கப்படும்,என்றார்.
ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி.ஓ., கண்ணன், கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளர் ராகவ் பாலாஜி, தனி வட்டாட்சியர் லட்சுமி, பி.டி.ஓ., தாஹிரா, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, பொன்ராஜ் கலந்து கொண்ட னர்.