sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கோயில்களில் அமாவாசை வழிபாடு

/

 கோயில்களில் அமாவாசை வழிபாடு

 கோயில்களில் அமாவாசை வழிபாடு

 கோயில்களில் அமாவாசை வழிபாடு


ADDED : நவ 20, 2025 05:55 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு மலர் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. உற்ஸவர் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், அடிவாரம் மலை குகை கோயில்களில் மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான முருகபக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

குட்டூர்-அண்ணாமலையார் கோயில், நத்தம் மாரியம்மன் கோயில், அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமி கோயில்களிலும் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.






      Dinamalar
      Follow us