sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தடகள போட்டிகள்: வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

/

தடகள போட்டிகள்: வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தடகள போட்டிகள்: வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தடகள போட்டிகள்: வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : அக் 31, 2024 02:58 AM

Google News

ADDED : அக் 31, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர்: திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.

கே.ராமநாதபுரம் பள்ளி சார்பில் 42 மாணவர்கள் பங்கேற்றனர். பிளஸ் 2 மாணவி பிரபா 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும்,8ம் வகுப்பு மாணவி வெண்ணிலா உயரம் தாண்டுதலிலும்,பிரவீன் 9ம் வகுப்பு குண்டு எறிதலிலும் வெற்றி பெற்று மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற தேர்ச்சி பெற்றனர்.

மாணவிகளுக்கான 14 வயதுக்கு உட்பட்டோர் தொடர் ஓட்டத்தில் கவிதா, மோனிஷா, பூவிதா அபிநயா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

நீளம் தாண்டுதலில் சர்மிளா 3ம் இடம், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜீவானந்தம் 3ம் இடம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கவிதா 2ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்றவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த், உதவி தலைமை ஆசிரியர் வீரமணி, ஆசிரியை முத்துமீனா, உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில் வடிவு, சத்யஜோதி ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us