/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'ஆயுள்'
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'ஆயுள்'
ADDED : செப் 22, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டிசெல்வம், 26. இவர், 2023ல் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்தார்.
சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார்படி, நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டிசெல்வத்தை கைது செய்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன், குற்றவாளி பாண்டிசெல்வத்துக்கு ஆயுள் தண்டனை, 55,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.