ADDED : செப் 01, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், செப்.2
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் மாவீரர் புலித்தேவனின் 312வது ஆண்டு பிறந்த நாள் விழா, தேசபக்தர் தாதாபாய்நவுரோஜியின் 202ம் ஆண்டு பிறந்த நாள் விழா திண்டுக்கல் தெற்கு ரத வீதி பஜனை மடம் அருகே நடந்தது.
இருவரது உருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மூத்தத் தலைவர் அருணகிரி முன்னிலை வகித்தார். செயலாளர் ரமேஷ்பாண்டி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். மாநகர் இளைஞர் பிரிவுத் தலைவர் நாகரத்தினப்பாண்டி நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை நிறுவனர் வைரவேல் செய்திருந்தார்.
