sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பள்ளி, கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் :கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார்

/

பள்ளி, கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் :கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார்

பள்ளி, கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் :கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார்

பள்ளி, கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் :கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார்


ADDED : ஜன 22, 2025 04:35 PM

Google News

ADDED : ஜன 22, 2025 04:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் தனியார் பள்ளி, கல்லுாரியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த இமெயிலை அனுப்பியது யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் பழைய நீதிமன்றம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் சி.பி.எஸ்.இ.,பள்ளி, பழநி ரோடு ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி 2 இடங்களிலும் ஜன.20 மதியம் 3;00 மணிக்கு வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர்கள் ஒருவர் இமெயில்

ஒன்றை அந்தந்த நிர்வாகங்களுக்கு அனுப்பினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தினர் உடனடியாக இந்த தகவல்களை மாணவர்களுக்கு

தெரிவித்து உடனே அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்.பி., பிரதீப் தலைமையிலான கியூ பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் போலீசார் செயின்ட்

ஜோசப் சி.பி.எஸ்.இ.,பள்ளி,பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி 2 இடங்களிலும் இரவு வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

எவ்வித வெடிகுண்டுசந்தேகப்படும்படியான பொருட்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. உடனே அது பொய்யான தகவல் என தெரிந்தது. பள்ளி, கல்லுாரிக்கு

மர்ம நபர்கள் அனுப்பிய இமெயில் இரண்டும் ஒரே அட்ரஸை கொண்டிருந்தது. சைபர்கிரைம் போலீசார் 2 நாட்களாக இமெயில்அனுப்பிய நபர் யார் என்பது குறித்து தீவிரமாக சோதனை நடத்தினர். இருந்தபோதிலும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் திணறும்

நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us