/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கறிக்கோழி வளர்ப்போர் ஆர்ப்பாட்டம்
/
கறிக்கோழி வளர்ப்போர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 21, 2026 06:07 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கறிக்கோழி விற்பனை நிறுவனங்கள் கொள்முதல் விலையை கிலோவிற்கு ரூ.20 என உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் துவங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் கே.பி.பெருமாள் பேசினார்.
மாவட்ட செயலாளர் என்.பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இராமசாமி, மாவட்டத் துணைத் தலைவர் சொக்கலிங்கம், பொருளாளர் குணசேகர், துணைச்செயலாளர் அருள்குமார், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முருகன், ராஜ்கண்ணு,வெள்ளைகண்ணு, மாரிமுத்து, சரவணன், பாண்டியராஜன், குணசேகரன் பங்கேற்றனர்.

