ADDED : ஆக 15, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே வி.எஸ். கோட்டையில் இருந்து நத்தம் நோக்கி 32 பயணிகளுடன் அரசு டவுன் பஸ் சென்றது.
பஸ்சை திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் ஓட்டினார். மழை பெய்த நிலையில் பஸ் தி.பள்ளபட்டி துர்க்கை அம்மன் கோயில் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. பயணிகள் அனைவரும் தப்பினர்.