sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வழித்தடம் மாறும் பஸ்களினால் பரிதவிப்பு

/

வழித்தடம் மாறும் பஸ்களினால் பரிதவிப்பு

வழித்தடம் மாறும் பஸ்களினால் பரிதவிப்பு

வழித்தடம் மாறும் பஸ்களினால் பரிதவிப்பு


ADDED : ஜூன் 08, 2025 03:57 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: இரவு நேர கடைசி டிரிப் அரசு டவுன் பஸ் பி.கொசவபட்டி வழியே வந்து செல்லாமல் நேர் வழியில் சென்றுவிடுவதால் மக்கள் பரிதவிக்கின்றனர்.

வடமதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை திண்டுக்கல் - எரியோடு மாநில நெடுஞ்சாலை இடைப்பட்ட பகுதியில் உள்ளது பி.கொசவபட்டி. இங்கிருந்து திண்டுக்கல்லிற்கு திருக்கண், குளத்துார் வழியே டிரிப் பஸ் சேவை உள்ளது. வடமதுரை வேடசந்துார் செல்லும் ஒரு டிரிப் மட்டும் காலை நேரத்தில் இவ்வழியே செல்கிறது.

பாடியூர், முள்ளிப்பாடி வழியே பகலில் 3 டிரிப்கள் முழுமையாக கிராமங்கள் வழியே வந்து அதே பாதையில் திரும்புகிறது. இந்த பஸ்சின் கடைசி இரவு டிரிப் மட்டும் திண்டுக்கல்லில் வரும்போது பி.கொசவபட்டி வழியே வந்து வடமதுரை செல்கிறது. திரும்பும்போது நேர்வழியில் தாமரைப்பாடி வழியே சென்றுவிடுகிறது.

இதனால் மாலை 5:00 மணிக்கு பின்னர் வடமதுரையில் இருந்து கிராமத்திற்கு பஸ் சேவையின்றி தவிக்கின்றனர். கடைசி டிரிப் திரும்பும் போதும் முறையான பாதையில் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us