ADDED : ஜூன் 27, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள் 70 பேருக்கு உலர் , ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. 25 வயதிற்கு மேல் உள்ளவர்கள், பிறந்த தேதிக்கான சான்று, கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் , கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்து மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்.88, மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என்ற முகவரியில் ஜூலை 14 க்குள் சமர்பிக்க வேண்டும்.