ADDED : அக் 30, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை தமிழர் தேசம் கட்சி நகர செயலாளர் செந்தில்குமாரின் வீட்டில் அக்.26 இரவு மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது.
அவரது மகனுக்கும் அதே பகுதி சிறுவர்களுக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்தது. 17 வயது 2 சிறுவர்களை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.
குண்டு வீச்சை கண்டித்து அக்கட்சியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் மகிடேஸ்வரன், மாவட்ட செயலாளர் ஆண்டி உள்ளிட்ட சிலர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

