sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பொதுப்பணித்துறை வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி அரசு பஸ் கண்டக்டர் உட்பட 6 பேர் மீது வழக்கு

/

பொதுப்பணித்துறை வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி அரசு பஸ் கண்டக்டர் உட்பட 6 பேர் மீது வழக்கு

பொதுப்பணித்துறை வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி அரசு பஸ் கண்டக்டர் உட்பட 6 பேர் மீது வழக்கு

பொதுப்பணித்துறை வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி அரசு பஸ் கண்டக்டர் உட்பட 6 பேர் மீது வழக்கு


ADDED : டிச 28, 2024 01:18 AM

Google News

ADDED : டிச 28, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வீருவீட்டில் 3 பேருக்கு பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக அரசு பஸ் கண்டக்டர் மாரிமுத்து உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வீருவீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 52. இவரது கடைக்கு வத்தலக்குண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரியும் நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து தினமும் வந்து செல்வார். அவரிடம் பி.எஸ்.சி., படித்த தன் மகன்கள் 2 பேர், தம்பி மகன் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என ராஜேந்திரன் கேட்டுள்ளார். அப்போது மாரிமுத்து,''தனக்கு தெரிந்த ஒருவர் உள்ளார். பணம் கொடுத்தால் அவரது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தலைமை செயலக அதிகாரிகள் மூலம் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் பணி வாங்கிவிடலாம்,'' என்றார்.

அதை நம்பிய ராஜேந்திரனிடம் கரூரைச் சேர்ந்த குமாரை மாரிமுத்து அறிமுகப்படுத்தினார். அவரோ,''ரூ.36 லட்சம் தாருங்கள். ஆறு மாதங்களில் வேலை வாங்கி விடலாம்,'' என்றார். இதனால் ராஜேந்திரன் முதல் தவணையாக ரூ.15 லட்சம், 2ம் தவணையாக ரூ.21 லட்சத்தை குமாரிடம் கொடுத்தார். பணத்தை பெற்று கொண்ட குமார் , மாரிமுத்து இருவரும் சில நாட்களில் தலைமறைவாயினர். பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேந்திரன் குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ., முத்தமிழ் மற்றும் போலீசார் விசாரித்து மாரிமுத்து, குமார், அவரது மனைவி பூமகள், உறவினர்கள் சுசித்ரா, யோகேஸ்வரன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us