ADDED : அக் 26, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி விநாயகப் பெருமானுக்கு அருகம்புல், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல பூமாலைகள் செலுத்தபட்டு சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள விநாயகர், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் உள்ள வலம்புரி விநாயகர் சன்னதி, பகவதி அம்மன் கோயில் உள்ள வெற்றி விநாயகர் சன்னதிகளிலும் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

