sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

/

 திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்


ADDED : டிச 26, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதி சர்ச்,வீடுகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மணிக்கூண்டு புனித வளனார் பேராலயத்தில் இயேசுவின் பிறப்பு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி திண்டுக்கல் மறைமாவட்ட பிஷப் தாமஸ் பால்சாமி தலைமையில் நடந்தது. திராளானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 96 பட்டியலில் தாய் கிராமமாக விளங்கக்கூடிய மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித வியாகுல அன்னை சர்ச்சில் பாதிரியார்கள் அருமைசாமி, செல்வராஜ், ஜஸ்டின் பாஸ்டின் தலைமையில் கிறிஸ்மஸ் விழா சிறப்பு திருப்பலி நடந்தது.

அதிகாலை 12:00 மணிக்கு நுழைவாயில் முன்புறம் இருந்து வால் நட்சத்திரம் தோன் றி சர்ச் பலி பீடத்தை சென்றடைந்த பின் மனித வாழ்வுக்கு அன்பே ஆணிவேர் என்பதை உணர்த்தும் விதமாக அன்பின் அடையாமான பூவை வேர் எடுத்துவர அதிலிருந்து குழந்தை இயேசு பிறப்பது போன்று வித்யாசமான முறையில் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டு மகிழ்ந்த இறைமக்கள் ஆனந்தத்தில் ஒருவரை ஒருவர் கை குலுக்கி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மாவட்டத்தின் பல சர்ச்களில் குழந்தை இயேசு பிறப்பு குடிலோடு அலங்கார வளைவுகளுடன் ஜொலித்தது. கிறிஸ்து பிறப்பு பக்தி பாடல்கள் இசை முழங்க பாதிரியார்களால் திருப்பலிகள் நிறை வேற்றபட்டது.

திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் வாழ்த்துக்களை பரிமாறி கேக், இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். கிறிஸ்து பிறப்பின் அடையாளமாக ஸ்டார்கள் மின்னொலியில் சர்ச்கள் மட்டுமன்றி பல வீடுகளும் அலங்காரமாய் காட்சி யளித்தது.

திண்டுக்கல் புனித வளனார் சர்ச் , குமரன் திருநகர் ஆரோக்கியமாதா சர்ச், என்.ஜி.ஓ., காலனி ஆரோக்கிய அன்னை சர்ச், மாரம்பாடி அந்தோணியார் சர்ச், மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச் உட்பட பல சர்ச் களில். அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

வடமதுரை : சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச்சில் போதகர் பெஞ்சமின் தலைமையில் கிறிஸ்துமஸ் ஆராதனை, சிறப்பு வழிபாடு நடந்தன. திருமண்டல உறுப்பினர்கள் சாந்தி அருள், டேவிட் சர்ச் நிர்வாகிகள் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

கன்னிவாடி: குட்டத்துப்பட்டி புனித அந்தோணியார் சர்ச்சில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. விழா திருப்பலிகள், கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.

கு.ஆவரம்பட்டி புனித சவேரியார் சர்ச் குடில். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பாதிரியார் நெப்போலியன் விழா திருப்பலி நிறை வேற்றினார்.

ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், வக்கம்பட்டி, கன்னிவாடி, காரமடை, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, எம்.அம்மாபட்டி உள்ளிட்ட இடங்களில் சர்ச் மட்டுமன்றி, வீடுகளும் வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரித்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பட்டது.






      Dinamalar
      Follow us